மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
மலையாள சினிமாவில் குணச்சித்ர நடிகர்களில் முக்கியமானவர் ஜாய் மேத்யூ. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஷட்டர் மற்றும் அங்கிள் என, இருக்கையில் அமரவைத்த திரில்லிங் படங்களுக்கு கதை எழுதியவரும் இவர் தான். அதுமட்டுமல்ல மனதில் பட்டதை துணிச்சலாக பேசி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள பைனரி என்கிற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், புரமோஷனுக்கு வர மறுக்கிறார் என்றும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் இவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவர்கள் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஜாய் மேத்யூ வர மறுக்கிறார். அவர் மட்டுமல்ல, இந்த படத்தில் நடித்துள்ள இன்னும் சில நட்சத்திரங்களும் புரமோசனை தவிர்க்கின்றனர். படப்பிடிப்பு தளத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரச்னை செய்தார் ஜாய் மேத்யூ. இந்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சென்றபோது இந்த ஸ்கிரிப்ட்டை படித்து ரொம்பவே விரும்புவதாக கூறியவர், பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது அந்த ஸ்கிரிப்ட்டை தூக்கி எறிந்தார். இந்த வசனங்கள் எனக்கு செட்டாகாது, இந்த காட்சியை மாற்றுங்கள் என திடீரென கூறினார்.
மூன்று நாட்கள் கால் சீட் கொடுத்தவர் ஒவ்வொரு நாளும் மதியம் வரை நடித்துவிட்டு கிளம்பிவிட்டார். ஒரு வழியாக படத்தை முடித்து விட்டோம். இப்போது புரமோசனுக்கும் கூட வர மறுக்கிறார். புதியதாக படம் பண்ணும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதுபோன்ற நடிகர்களை ஒப்பந்தம் செய்யும்போது புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் செய்யுங்கள்” என்று விரக்தியுடன் கூறியுள்ளனர்.