ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் குணச்சித்ர நடிகர்களில் முக்கியமானவர் ஜாய் மேத்யூ. மலையாளத்தில் வெற்றி பெற்ற ஷட்டர் மற்றும் அங்கிள் என, இருக்கையில் அமரவைத்த திரில்லிங் படங்களுக்கு கதை எழுதியவரும் இவர் தான். அதுமட்டுமல்ல மனதில் பட்டதை துணிச்சலாக பேசி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள பைனரி என்கிற படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும், புரமோஷனுக்கு வர மறுக்கிறார் என்றும் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் ஆகியோர் இவர் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.
இதுகுறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவர்கள் பேசும்போது, “இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிக்கு ஜாய் மேத்யூ வர மறுக்கிறார். அவர் மட்டுமல்ல, இந்த படத்தில் நடித்துள்ள இன்னும் சில நட்சத்திரங்களும் புரமோசனை தவிர்க்கின்றனர். படப்பிடிப்பு தளத்திலும் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரச்னை செய்தார் ஜாய் மேத்யூ. இந்த படத்தில் அவரை ஒப்பந்தம் செய்வதற்காக சென்றபோது இந்த ஸ்கிரிப்ட்டை படித்து ரொம்பவே விரும்புவதாக கூறியவர், பின்னர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது அந்த ஸ்கிரிப்ட்டை தூக்கி எறிந்தார். இந்த வசனங்கள் எனக்கு செட்டாகாது, இந்த காட்சியை மாற்றுங்கள் என திடீரென கூறினார்.
மூன்று நாட்கள் கால் சீட் கொடுத்தவர் ஒவ்வொரு நாளும் மதியம் வரை நடித்துவிட்டு கிளம்பிவிட்டார். ஒரு வழியாக படத்தை முடித்து விட்டோம். இப்போது புரமோசனுக்கும் கூட வர மறுக்கிறார். புதியதாக படம் பண்ணும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதுபோன்ற நடிகர்களை ஒப்பந்தம் செய்யும்போது புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு ஒப்பந்தம் செய்யுங்கள்” என்று விரக்தியுடன் கூறியுள்ளனர்.