எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

கன்னட திரையுலகில் இருந்து கேஜிஎப் என்கிற பிரம்மாண்ட படத்தை தொடர்ந்து, மீடியமான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மீண்டும் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் காந்தாரா. இந்த படத்தில் நாயகனாக நடித்ததுடன் படத்தையும் இயக்கி இருந்தார் ரிஷப் ஷெட்டி. இதைத்தொடர்ந்து அடுத்ததாக அவர் நடிக்கும் படம் குறித்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்ல காந்தாரா படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருக்கிறது என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் காந்தாரா படத்தின் தயாரிப்பாளரே கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் தமிழில் லெஜெண்ட் படத்தில் அண்ணாச்சி சரவணனுக்கு ஜோடியாக நடித்த ஊர்வசி ரவுட்டேலா ரிஷப் ஷெட்டியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளதுடன் 'காந்தாரா-2 லோடிங்' என்கிற கேப்ஷனையும் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து காந்தாரா-2 படத்தில் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடிக்கிறார் என்பது போன்று செய்திகள் பரபரப்பாக பரவ ஆரம்பித்தன. ஆனால் காந்தாரா பட தயாரிப்பு நிறுவனத்தின் வட்டாரத்திலிருந்து வெளியான தகவலில், காந்தாரா-2ல் ஊர்வசி ரவுட்டேலா கதாநாயகியாக நடிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது..
“சமீபத்தில் ரிஷப் ஷெட்டி கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்காக அவர் வந்திருந்த இடத்திற்கு வேறு ஒரு நிகழ்ச்சிக்காக ஊர்வசி ரவுட்டேலாவும் வந்திருந்தார். அப்போது ரிஷப் ஷெட்டி அங்கு இருப்பதை கேள்விப்பட்டு அவரை சந்திக்க விரும்பினார். ரிஷப் ஷெட்டியும் மகிழ்ச்சியுடன் ஊர்வசியை சந்தித்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட ஊர்வசி ரவுட்டேலா காந்தாரா-2 லோடிங் என்கிற வார்த்தையை குறிப்பிட்டதால்தான் இந்த அளவிற்கு அந்த செய்தி பரபரப்பாகிவிட்டது” என்று கூறியுள்ளார்கள்.