இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

மோசடி வழக்கில் காமெடி நடிகர் டாக்டர் சீனிவாசன் டில்லியில் கைது செய்யப்பட்டார்.
அக்குபஞ்சர் டாக்டரான சீனிவாசன், ‛லத்திகா' என்ற படத்தின் மூலம் நடிகரானார். தொடர்ந்து ‛கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். தனக்கு தானே ‛பவர்ஸ்டார்' என பட்டம் சூட்டிக் கொண்டு சினிமாவில் அந்த பெயரில் வலம் வந்தார்.
டில்லியில் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி பணம் பெற்றுள்ளார். ஆனால் கடன் பெற்று தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட தொடர்பாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக இருமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார் சீனிவாசன். இந்நிலையில் டில்லியில் வைத்து சீனிவாசனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சீனிவாசன் மீது நிறைய மோசடி வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே இவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




