ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் |

மோசடி வழக்கில் காமெடி நடிகர் டாக்டர் சீனிவாசன் டில்லியில் கைது செய்யப்பட்டார்.
அக்குபஞ்சர் டாக்டரான சீனிவாசன், ‛லத்திகா' என்ற படத்தின் மூலம் நடிகரானார். தொடர்ந்து ‛கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். தனக்கு தானே ‛பவர்ஸ்டார்' என பட்டம் சூட்டிக் கொண்டு சினிமாவில் அந்த பெயரில் வலம் வந்தார்.
டில்லியில் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி பணம் பெற்றுள்ளார். ஆனால் கடன் பெற்று தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட தொடர்பாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக இருமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார் சீனிவாசன். இந்நிலையில் டில்லியில் வைத்து சீனிவாசனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சீனிவாசன் மீது நிறைய மோசடி வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே இவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.