பிளாஷ்பேக் : உதவியாளருக்காக திரைக்கதை எழுதிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : ஜெயித்த பிச்சைக்காரி, தோற்ற பணக்காரி | யு டியூப்பில் வெளியிடப்பட்ட திருக்குறள் | லோகா ஒளிப்பதிவாளருக்கு விலை உயர்ந்த வாட்ச் பரிசளித்த கல்யாணி பிரியதர்ஷன் | நானி படத்தை இயக்கும் ஓஜி இயக்குனர் ; பூஜையுடன் படம் துவங்கியது | தீவிரமாக களரி பயிற்சி கற்று வரும் இஷா தல்வார் | தொடரும் பட இயக்குனரின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஹீரோவாக நடிக்கும் பிரித்விராஜ் | மகளின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப சொன்னார்கள் : அக்ஷய் குமார் அதிர்ச்சி தகவல் | அப்ப தியேட்டரில் ஓடின இப்ப, செல்போனில் ஓடுது : நடிகை லதா | பல ஆண்டுகளுக்குபின் வெளியாகும் கும்கி 2 |
மோசடி வழக்கில் காமெடி நடிகர் டாக்டர் சீனிவாசன் டில்லியில் கைது செய்யப்பட்டார்.
அக்குபஞ்சர் டாக்டரான சீனிவாசன், ‛லத்திகா' என்ற படத்தின் மூலம் நடிகரானார். தொடர்ந்து ‛கண்ணா லட்டு தின்ன ஆசையா' உள்ளிட்ட படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். தனக்கு தானே ‛பவர்ஸ்டார்' என பட்டம் சூட்டிக் கொண்டு சினிமாவில் அந்த பெயரில் வலம் வந்தார்.
டில்லியில் தொழில் அதிபர் ஒருவரிடம் ரூ.1000 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.5 கோடி பணம் பெற்றுள்ளார். ஆனால் கடன் பெற்று தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. மோசடி செய்யப்பட்ட பணத்தை திரைப்பட தொடர்பாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளியாக இருமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார் சீனிவாசன். இந்நிலையில் டில்லியில் வைத்து சீனிவாசனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சீனிவாசன் மீது நிறைய மோசடி வழக்குகள் உள்ளன. இதுதொடர்பாக ஏற்கனவே இவர் சிறை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.