திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

வாரிசு நடிகர்கள் என்றாலும் நடிகர் துல்கர் சல்மானும், நாக சைதன்யாவும் தங்களது திறமையால் தங்களுக்கென அவரவர் சார்ந்த திரையுலகில் நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளனர். அதிலும் துல்கர் சல்மான் தற்போது மலையாளம் தாண்டி பான் இந்தியா நடிகர் என சொல்லும் வகையில் அனைத்து மொழி படங்களிலும் சீரான இடைவெளியில் நடித்து வருகிறார். அதேபோல நாகசைதன்யாவும் வெங்கட்பிரபுவின் கஸ்டடி படத்தில் நடிப்பதன் மூலமாக நேரடியாக தமிழுக்கு வர இருக்கிறார். பொதுவாகவே துல்கர் சல்மான் சென்னைக்கு வந்தால் அடிக்கடி விக்ரம் பிரபுவை சந்திப்பதால் அவர்கள் மட்டுமே நண்பர்கள் என்பது போன்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் துல்கர் சல்மானும் நாக சைதன்யாவும் சென்னையில் ஒரே கல்லூரியில் ஒன்றாக படித்தபோது நண்பர்கள் ஆனவர்கள் தான். அந்த வகையில் தற்போது இவர்கள் இருவரும் தங்களுடன் கல்லூரியில் படித்த நண்பர்களுடன் ஒன்றாக விருந்து ஒன்றில் சந்தித்துக்கொண்டு தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து மகிழந்துள்ளனர். இவர்களது கல்லூரி நண்பர்களில் ஒருவர் இந்த புகைப்படத்தை தனது சோசியல் பக்கத்தில் பகிர்ந்துகொண்டு, “நீண்ட நாளைக்கு பிறகு பசங்க எல்லாம் ஒன்று கூடி இருக்கிறோம்” என்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.




