துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சபரிமலையில் உள்ள ஐயப்பனின் பக்தையான மாளிகைப்புரத்து அம்மன் கதையை மையப்படுத்தி மலையாளத்தில் மாளிகைப்புரம் என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஐயப்ப பக்தையாக சிறுமி தேவானந்தா என்பவர் நடித்திருக்கிறார். விஷ்ணு சசி சங்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அமலாபால் நடித்த கடாவர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளைதான் கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் துவக்கத்தில் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் இருவர் பற்றிய கதைச்சுருக்கம் இடம்பெறுகிறது. இதனை மம்முட்டி பேசினால் நன்றாக இருக்கும் என நினைத்த படக்குழுவினர் அவரிடம் அதை கோரிக்கையாக வைத்தனர். படத்தின் ஹீரோவான உன்னி முகுந்தனுடன் மம்முட்டி நெருங்கிய நட்பு கொண்டவர் என்பதால் அவரும் மறுப்பின்றி சம்மதித்து இந்த கதை சுருக்கத்திற்கு டப்பிங்கும் பேசியுள்ளார். மம்முட்டியின் குரல் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிட்டது என்கின்றனர் படக்குழுவினர்.