இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் |
சபரிமலையில் உள்ள ஐயப்பனின் பக்தையான மாளிகைப்புரத்து அம்மன் கதையை மையப்படுத்தி மலையாளத்தில் மாளிகைப்புரம் என்கிற படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் கதாநாயகனாக நடித்துள்ளார். இதில் ஐயப்ப பக்தையாக சிறுமி தேவானந்தா என்பவர் நடித்திருக்கிறார். விஷ்ணு சசி சங்கர் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அமலாபால் நடித்த கடாவர் உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதிய அபிலாஷ் பிள்ளைதான் கதை எழுதியுள்ளார்.
இந்த படத்தின் துவக்கத்தில் ஐயப்பன் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் இருவர் பற்றிய கதைச்சுருக்கம் இடம்பெறுகிறது. இதனை மம்முட்டி பேசினால் நன்றாக இருக்கும் என நினைத்த படக்குழுவினர் அவரிடம் அதை கோரிக்கையாக வைத்தனர். படத்தின் ஹீரோவான உன்னி முகுந்தனுடன் மம்முட்டி நெருங்கிய நட்பு கொண்டவர் என்பதால் அவரும் மறுப்பின்றி சம்மதித்து இந்த கதை சுருக்கத்திற்கு டப்பிங்கும் பேசியுள்ளார். மம்முட்டியின் குரல் இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்துவிட்டது என்கின்றனர் படக்குழுவினர்.