சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நேரம் மற்றும் பிரேமம் என இரண்டு படங்களை இயக்கியவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். பிரேமம் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னரும் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் படம் இயக்காமல் இருந்த அல்போன்ஸ் புத்ரன் தற்போது பிரித்விராஜ், நயன்தாரா நடிப்பில் கோல்டு என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் ஓணம் பண்டிகைக்கே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பட வெளியீட்டில் தாமதம் ஏற்படும் என அல்போன்ஸ் புத்ரன் கூறியிருந்தார். அதுகுறித்து அவர் விளக்கம் அளித்தபோது ரசிகர்களுக்கு நல்ல ஒரு படைப்பை கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த தாமதம் என்றும் படத்தில் விஎப்எஸ் பணிகள் நிறைய இருப்பதால் இந்த தாமதம் அவசியமானதே என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் இந்த படத்தில் எடுக்கப்பட்ட சில முக்கியமான காட்சிகள் எடிட்டிங்கில் பார்த்தபோது அல்போன்ஸ் புத்ரனுக்கு திருப்தி அளிக்காததால் மீண்டும் அந்த காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளாராம். அந்த காட்சிகளில் பிரித்விராஜுடன் நயன்தாராவும் நடிக்க வேண்டியிருப்பதால் அது குறித்த தேதிகளை முடிவு செய்ய காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. அந்த காட்சிகளை மீண்டும் படமாக்கிய பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ மறு அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.