
17 ஆண்டுகள் கழித்து மம்முட்டியை மீண்டும் இயக்கும் அன்வர் ரஷீத்
இந்தநிலையில் ட்ரான்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இவர் மம்முட்டி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. அந்த வகையில் மம்முட்டியுடன் 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் கைகோர்க்கிறார் அன்வர் ரஷீத்.
இன்றும் கூட கேரளாவில் விஷேச தினங்களில் மற்ற மலையாள சேனல்களில் எத்தனை புதுப்படங்களை ஒளிபரப்பினாலும், ஒரு குறிப்பிட்ட சேனல் மட்டும் நம்ம ஊரில் "பாட்ஷா"வை களம் இறக்குவது மாதிரி அங்கே "ராஜமாணிக்கம்" படத்தை தான் ஒன்மேன் ஆர்மியாக களம் இறக்கி வருகிறது. 17 ஆண்டுகளுக்கு முன்னரே 23 கோடி ரூபாய் வசூலித்த படம் என்கிற சாதனையையும் இந்தப்படம் செய்தது. அதுமட்டுமல்ல மம்முட்டிக்கு காமெடி ஒர்க் அவுட் ஆகாது என அதுவரை இருந்த மாயையையும் இந்தப்படம் அடித்து தகர்த்தது குறிப்பிடத்தக்கது..


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!