என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
காட்பாதர் படத்திற்கு பிறகு சிரஞ்சீவி நடிக்கும் அடுத்த படத்திற்கு 'வால்டர் வீரய்யா' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது சிரஞ்சீவியின் 154வது படம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கே எஸ் ரவீந்திரா இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ரவிதேஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கோனா வெங்கட் மற்றும் கே.சக்கரவர்த்தி ரெட்டி ஆகியோர் திரைக்கதையை எழுத, கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுத்தாளர்கள் ஹரி மோகன கிருஷ்ணா மற்றும் வினித் பொட்லுரி எழுதியுள்ளனர். அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு வெளியாகும் என்று அறிவிக்ப்பட்டுள்ளது.