பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் அவரது நடிப்பு, மேனரிசம் எல்லாமே தெலுங்கு மொழியை தாண்டி தென்னிந்தியா மட்டுமல்லாது வட இந்தியாவிலும் அவருக்கு மிகப்பெரிய புகழை சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் தனது மனைவி சினேகாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொற்கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அதை தொடர்ந்து அங்கிருந்து அட்டாரி எல்லைப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார் அல்லு அர்ஜுன்.. அங்கு அவர்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும் வீரர்களும் வரவேற்றனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடங்களை சுற்றி காட்டிய வீர்கள் அவரது மகன் சளைக்காமல் கேட்ட கேள்விகள் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் அளித்தனர்.. அல்லு அர்ஜுன் அங்கே வந்ததை அறிந்து ரசிகர்கள் பலர் நூற்றுக்கணக்கில் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் அல்லு அர்ஜுன்.