ஐந்து தலைமுறைகளை கண்ட மலையாள நடிகர் இன்னோசன்ட் காலமானார் | தசரா பட டப்பிங்கை ஆறு நாட்களிலேயே முடித்தேன் ; கீர்த்தி சுரேஷ் | ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளுக்கு ஆலியா பட் அனுப்பி வைத்த அன்பு பரிசு | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்க நானும் ஒரு காரணம் ; அஜய் தேவ்கன் | சுந்தர்.சி படத்தில் விஷாலுக்கு பதிலாக பிருத்வி ராஜ்? | பிரபல இளம் நடிகை அகன்ஷா துபே தூக்கிட்டு தற்கொலை | மயோசிட்டிஸில் இருந்து முழுமையாக குணமடைந்து விட்டாரா சமந்தா? | காஜல் அகர்வாலின் கருங்காப்பியம் ஏப்ரல் 7ம் தேதி ரிலீஸ்! | கரகாட்டக்காரன்- 2 படத்தை இயக்கும் வெங்கட் பிரபு! | பத்து தல படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனங்கள் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அங்கமாலி டைரீஸ், படத்தின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தான் இயக்கிய அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களை கையாண்டிருந்த லிஜோ ஜோஸ் பள்ளிசேரி ரொம்பவே எதார்த்தமாக தனது படங்களை கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் இவரது இயக்கத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மம்முட்டி வெகு சாதாரணமான ஒரு கிராமத்து மனிதன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மம்முட்டி அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தற்போது மலையாள திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வமாக இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படாவிட்டாலும் நிச்சயமாக சில நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்துவரும் ராம் படத்தை முடித்த பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.