‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அங்கமாலி டைரீஸ், படத்தின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தான் இயக்கிய அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களை கையாண்டிருந்த லிஜோ ஜோஸ் பள்ளிசேரி ரொம்பவே எதார்த்தமாக தனது படங்களை கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் இவரது இயக்கத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மம்முட்டி வெகு சாதாரணமான ஒரு கிராமத்து மனிதன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மம்முட்டி அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தற்போது மலையாள திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வமாக இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படாவிட்டாலும் நிச்சயமாக சில நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்துவரும் ராம் படத்தை முடித்த பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.