22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
மலையாளத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான அங்கமாலி டைரீஸ், படத்தின் மூலம் இயக்குனராக புகழ் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. அதைத்தொடர்ந்து ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தான் இயக்கிய அனைத்துப் படங்களிலும் வித்தியாசமான கதைக்களங்களை கையாண்டிருந்த லிஜோ ஜோஸ் பள்ளிசேரி ரொம்பவே எதார்த்தமாக தனது படங்களை கொடுத்து வருகிறார்.
இந்தநிலையில் தற்போது நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் இவரது இயக்கத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் மம்முட்டி வெகு சாதாரணமான ஒரு கிராமத்து மனிதன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து மம்முட்டி அடுத்ததாக மோகன்லால் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தற்போது மலையாள திரையுலக வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரபூர்வமாக இன்னும் இந்த தகவல் உறுதி செய்யப்படாவிட்டாலும் நிச்சயமாக சில நாட்களுக்குள் அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடித்துவரும் ராம் படத்தை முடித்த பின்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.