'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

மலையாளத்தில் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்கிற மனிதனுக்கும் இயந்திரத்திற்குமான பாசத்தை மையமாக வைத்து சென்டிமென்ட்டாக உருவான ஹிட் படத்தை இயக்கியவர் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். இவர் தற்போது மலையாளத்தில் குஞ்சாகோ போபன் நடிப்பில் உருவாகி வரும் 'நின்ன தான் கேஸ் கொடு' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் தமிழ் நடிகை காயத்ரி கதாநாயகியாக நடித்து வருகிறார்.
39 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான காதோடு காதோரம் என்கிற படத்தில் இடம்பெற்ற தேவதூதர் பாடி என்கிற பாடலை இந்த படத்தில் குஞ்சாக்கோ போபன் பாடுவது போல ரீ கிரியேட் செய்து உள்ளார் இயக்குனர் ரதிஷ் பாலகிருஷ்ணன். சமீபத்தில் இந்த பாடல் சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த பாடலை வெளியிட்ட நடிகர் மம்முட்டி, “37 வருடங்களுக்கு முன் வெளியாகி லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட இந்த பாடலை தற்போது நின்னதான் கேஸ் கொடு என்கிற படத்திற்காக ரீ கிரியேட் செய்திருப்பதில் ரொம்பவே மகிழ்ச்சி. அன்பான குஞ்சாக்கோ போபன் மற்றும் படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார். இதன் ஒரிஜினல் பாடலை கே.ஜே ஜேசுதாஸ் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




