படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சென்னையில் நடந்த படையாண்ட மாவீரா பட விழாவில் பேசிய தங்கர்பச்சான் ''இன்று சமூக ஊடகங்கள் 24 மணி நேரமும் பசியோடு இயங்கிக்கொண்டு இருக்கிறது. யாராவது எதையாவது பேசணும். அதை பெரிதாக்கி வருமானம் ஈட்ட வேண்டும் என்று அவர்கள் இயக்கிக் கொண்டு இருக்கிறார்கள். மனநோயாளிகள் அதில் அதிகமாக இருக்கிறார்கள். அவர்கள் சொந்த பெயரில் இயங்குவது இல்லை. யாரோ சொல்லி, அரசியல்வாதிகள் சொல்லி அவர்கள் தாக்குகிறார்கள். கமென்ட் என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள்.
இந்த மண், மக்களுக்கு தேவையானதை தவிர்த்து, அதை முடக்கி வேறு திசைக்கு கொண்டு செல்கிறார்கள். சமூக ஊடகத்தில் இயங்குவது பெரிய தொழில் ஆகிவிட்டது. அவ்வளவு பணம் அதில் இருக்கிறது. எல்லாரும் டாக்டர் மாதிரி பேசுகிறார்கள். அனைத்தையும் தெரிந்தது மாதிரி பேசுகிறார்கள். ஏதாவது நல்லது செய்யணும்னு யாராவது வந்தால் அவர்களை தாக்கியே காலி பண்ணுகிறார்கள். எது சொன்னாலும் கமென்ட் போடுவார்கள்.
இப்போது நல்ல சினிமா வெற்றி பெறுவதை விட, மக்களுக்கு பலன் தராத படங்கள் ஓடுகிறது. அந்த படங்கள்தான் கொண்டாடப்படுகிறது. அவர்கள்தான் நேரத்தையும், பணத்தையும் பறிக்கிறார்கள். அவர்களிடம் அரசியல்வாதிகளை விட அதிக பணம் இருக்கிறது. அதற்கு சமூக ஊடகங்களும் காரணம், நாலைந்து நடிகர்கள்தான் என்ன படம் வரணும்னு முடிவு செய்கிறார்கள். ஒரு படம் எப்படி இருக்கிறது என்று சொல்வது இல்லை. இந்த படம் 400 கோடி வசூலா? 500 கோடி வசூலா என்று சிந்திக்க வைக்கிறார்கள்'' என்று பொங்கினார்.