படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் | சிம்பு மீது அதிருப்தியில் தமன்? | மீண்டும் இணையும் மதகஜராஜா கூட்டணி | சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் |
கொரோனா தொற்று காரணமாக திரைப்படத்துறை பெரும் அளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் தற்போது சினிமாத்துறை முன்பைவிட அதிக வேகத்தில் வசூலை குவித்து வருகிறது. தெலுங்கு சினிமாவில் புஷ்பா, ஆர்ஆர்ஆர் படங்கள் கோடிகளை குவித்தது. கொரோனா காலத்தில் சம்பள உயர்வு எதையும் தொழிலாளர்கள் பெறவில்லை.
சினிமா தொழிலாளர்களுக்கு 3 வருடத்துக்கு ஒரு முறை ஊதியம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த 4 வருடங்களாக தெலுங்கு சினிமாவில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. தற்போது சினிமாவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாலும், விலைவாசி உயர்வு காரணமாகவும் தங்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தொழிலாளர்கள் கூறிவந்தனர்.
இந்நிலையில், தெலுங்கு திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி, இன்று (ஜூன் 22) முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் தெலுங்கு படப்பிடிப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு, ஐதராபாத்தில் நடந்து வரும் தமிழ் படத்தின் படப்பிடிப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளது.