ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகர் பிரித்விராஜ். இவரது மனைவி சுப்ரியா மேனன். மும்பையில் பத்திரிக்கை நிருபராக பணிபுரிந்த இவரை ஒரு பேட்டியின்போது சந்தித்த பிரித்திவிராஜ், இவருடன் காதலில் விழுந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டார். பிரித்விராஜ் பிசியான நடிகராகவும், இயக்குனராகவும் மாறிவிட்ட நிலையில் சுப்ரியா மேனன் பிரித்விராஜ் புரடக்சன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சுப்ரியா, மறைந்த தனது தந்தை குறித்து சமீபத்தில் சோகமான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு நெட்டிசன் ஒருவர் எதற்கு சோசியல் மீடியாவை இப்படி சோகமான பதிவுகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்..? இப்படி பதிவிடுவதால் உங்கள் தந்தை வந்துவிடப் போகிறாரா என்ன என கேள்வி எழுப்பி இருந்தார்.
அவரது கேள்விக்கு கொஞ்சமும் கோபப்படாமல், “இன்னும் இதுபோன்ற சூழ்நிலையை நீங்கள் சந்தித்திருக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். சோசியல் மீடியா என்பது சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு அல்ல.. உங்களுக்கு இப்படிப்பட்ட பதிவுகள் பிடிக்கவில்லை என்றால் கமெண்ட் செய்வதற்கு பதிலாக, என்னை பின்தொடர்வதை நிறுத்திவிட்டு வேறு வேலையைப் பார்க்க போகலாம்.. எதற்காக நேரத்தை வீணாக செலவிடுகிறீர்கள்” என்று நாகரிகமாக பதிலடி கொடுத்துள்ளார். அவரது இந்த பதிலுக்கு வரவேற்பு கிடைத்துள்ளதுடன் அப்படி கேள்வி கேட்ட நபரையும் மற்ற நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர்.