லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
மலையாளத்தில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் நடிகர் விஜய்பாபு. பிரைடே பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் பல வெற்றி படங்களை தயாரித்த இவர், இன்னொரு பக்கம் பிசியான நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் மீது நடிகை ஒருவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வு குறித்து சம்பந்தப்பட்ட நடிகை தனது சோசியல் மீடியா பக்கத்தில் மிக விரிவான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் விஜய்பாபு கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தனது உடல்நிலை சரியில்லாத நிலையிலும் தன்னை பலவந்தமாக பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் அந்த பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, “ஏற்கனவே விஜய்பாபு தயாரிப்பில் ஒரு படத்தில், நான் நடித்துள்ளேன். அந்த படப்பிடிப்பு நடந்த சமயத்தில் எனது நன்மதிப்பைப் பெறும் விதமாக நடந்து கொண்ட விஜய்பாபு கொஞ்சம் கொஞ்சமாக என்னை அவர் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை காட்டி பலமுறை என்னை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.. மேலும் இதை வைத்து என்னை தொடர்ந்து தனது ஆசைக்கு அடிபணிய வைப்பதுடன் என்னுடைய திரையுலக முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக இருக்கிறார். இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்..
இதேபோல பல பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரிய வந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். அதனாலேயே அவரது உண்மை சொரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டவேண்டும் என்று இவர் மீது வழக்கு தொடுத்துள்ளேன். இவரால் பாதிக்கப்பட்ட மற்ற பெண்களும் புதுசாக வெளியே வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட நீதி பற்றி பேச வேண்டுமென்று அதில் கூறியுள்ளார்