'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மலையாள நடிகைகளில் குறிப்பிட்டு சொல்லத்தக்கவர் நடிகை மைதிலி. கதாநாயகி என்கிற நிலையை தாண்டி, மிக முக்கியமான கதாபாத்திரங்கள் என்றால் பல இயக்குனர்களும் கண்களை மூடிக்கொண்டு மைதிலியின் பெயரை டிக் அடிப்பார்கள். ஞான் என்கிற படத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த இவர், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் ரஞ்சித்தால் மம்முட்டி நடித்த பாலேறி மாணிக்கம் என்கிற படத்தில் கடந்த 2009ல் அறிமுகமான மைதிலி அவரது பல படங்களில் உதவி இயக்குனராகவும் கூட பணியாற்றியுள்ளார்.
இந்தநிலையில் ஆர்க்கிடெக்ட் ஆக பணிபுரியும் சம்பத் என்பவருக்கும் மைதிலிக்கும் குருவாயூர் கோவிலில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டனர். திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்துகொள்ளும் வகையில் இன்று மாலை கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.