காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

அறை எண் 305-ல் கடவுள் திரைப்படத்தில் ஜாவா சுந்தரேசனாகப் பலராலும் அறியப்பட்ட நகைச்சுவை நடிகர் 'ஜாவா சுந்தரேசனின்' இயற்பெயர் சுவாமிநாதன். திரைத்துறைக்காக சுருக்கி 'சாம்ஸ்' என பெயரை மாற்றிக்கொண்ட அவர், அப்படத்தில் ஜாவா சுந்தரேசனாக ஒரு சிறு கதாபாத்திரத்தில் வந்தாலும், பலராலும் ரசிக்கப்பட்டவராக மாறினார்.
தொடர்ந்த பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து பிரபலமானார். ஜாவா சுந்தரேசன் கதாபாத்திரம் எந்தளவிற்கு பிரபலமானதோ அதேபோல், 'கருப்பசாமி குத்தகைதாரர்' படத்தில் வடிவேலு காமெடியில் 'நகைக்கடைகாரர் மகன்' என பேசும் வசனமும் பிரபலமானது.
இவர் தற்போது தனது பெயரை அடையாளமாக மாறியுள்ள ஜாவா சுந்தரேசன் என்ற பெயராக மாற்றிக்கொண்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: சாம்ஸ் என்ற பெயரில் தான் பல வருடங்களாக பல படங்களில் நடித்து வந்துள்ளேன். இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் வந்த 'அறை எண் 305ல் கடவுள்' படத்தில் நான் நடித்த 'ஜாவா சுந்தரேசன்' கதாபாத்திரம் மிகவும் புகழ்பெற்று அந்தப் பெயர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டது.
எனவே மக்கள் விருப்பமே மகேசன் விருப்பமாக ஏற்று எனது பெயரை "ஜாவா சுந்தரேசன்" என்று மாற்றிக்கொள்ள முடிவு செய்துள்ளேன். "ஜாவா சுந்தரேசன்" என்ற கேரக்டரை உருவாக்கிய இயக்குனர் சிம்பு தேவனிடம் முறைப்படி அனுமதி பெற்றுக் கொண்டு அவரின் வாழ்த்துக்களோடு இனி நான் "ஜாவா சுந்தரேசன்" ஆக எனது திரைப்பயணத்தை தொடர்கிறேன். அனைவரும் வழக்கம்போல் தொடர்ந்து உங்கள் அன்பையும் ஆதரவையும் தந்து இனி என்னை "ஜாவா சுந்தரேசன்" என்றே அழைக்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.




