'வாரண்ட்' தொடரில் போலீசாரின் வலி மிகுந்த வாழ்க்கை : இயக்குநனர் தகவல் | பெண் ஓவியரின் பயோபிக்கில் நடிக்கும் அஞ்சலி சிவராமன் | 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வரும் அபர்ணா | ஹாலிவுட் நடிகர் டொனால்ட் கிப் காலமானார் | பிளாஷ்பேக் : ஜெயலலிதா நடிக்க முடியாமல் போன நாடக கதை | பிளாஷ்பேக் : ஜெமினி சிறுவர்கள் யார் தெரியுமா? | சிங்கிள் தியேட்டர்கள் ஸ்டிரைக் : தெலுங்கானா தியேட்டர் சங்கம் முடிவு ? | தமிழ்ப் படம் இயக்கும் ஹிந்தி இயக்குனர் பால்கி | கருப்பு இன்று வெளியானது : எங்களுடன் துணை நின்றதுக்கு சூர்யா நன்றி | எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி |

தற்போது தமிழில் சுந்தர். சி இயக்கும் 'மூக்குத்தி அம்மன்-2' படத்தில் நடித்து வருகிறார் நயன்தாரா. 100 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் நயன்தாராவுடன் ரெஜினா, இனியா, யோகி பாபு, துனியா விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.
அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வரும் 'மன சங்கர வர பிரசாத் கரு' என்ற படத்தின் நயன்தாரா முதல் தோற்றத்தையும் நேற்று வெளியிட்டுள்ளார்கள். அதில், நயன்தாராவின் கேரக்டர் பெயர் சசிரேகா என்று இடம்பெற்றுள்ளது. அதோடு பிரகாசமான மஞ்சள் நிற சேலையில், முத்து நெக்லஸ் மற்றும் வளையல்கள் உள்ளிட்ட பாரம்பரிய நகைகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறார் நயன்தாரா. கருப்பு கைப்பிடி கொண்ட குடையை ஏற்றியபடி ஒரு பண்டிகை பின்னணியில் காணப்படும் நயன்தாரா, நேர்த்தியையும் வசீகரத்தையும் வெளிப்படுத்துகிறார். இப்படம் 2026ம் ஆண்டு சங்கராந்தி பண்டிகைக்கு வெளியாகிறது.