ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கு திரையுலகை பொறுத்தவரை சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா, வெங்கடேஷ் என மூன்று கலை குடும்பங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவு செல்வாக்கு கொண்ட குடும்பமாக நடிகர் சிரஞ்சீவியின் குடும்பம் திகழ்கிறது. சிரஞ்சீவியின் குடும்பத்திலிருந்து அவரது தம்பிகளான பவன் கல்யாண், நாக பாபு, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியின் சகோதரிகளின் மகன்கள், சிரஞ்சீவியின் மைத்துனர் மகனான அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் என பலர் தெலுங்கு திரையுலகில் நடிகர்களாக வலம் வருகின்றனர். இவர்கள் அனைவருடனும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஒரு முறை ருத்ரவீணா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான நர்கீஸ் தத் விருது சிரஞ்சீவிக்கு வழங்கப்பட்டது. இதை பெறுவதற்காக அவர் மும்பை சென்றபோது அந்த விழாவில் தான் ஏதோ ஒரு புதிய நடிகர் போல அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்துள்ளார் சிரஞ்சீவி.
அந்த விழாவில் பாலிவுட்டை சேர்ந்த கபூர் குடும்பத்தின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்ததாகவும் பின்னர் தனது தம்பி பவன் கல்யாணிடம் ஒருமுறை சிரஞ்சீவி கூறும்போது தென்னிந்தியாவின் கபூர் குடும்பம் போல நம் குடும்பம் திகழ வேண்டும் என தான் விரும்புவதாக கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார் நடிகர் சிரஞ்சீவி.