ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் மலையாள திரையுலகில் தியேட்டர்களில் பெரிய அளவில் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை. அந்த சமயத்தில் ஓடிடி தளங்கள் மூலமாக தனது படங்களை அடுத்தடுத்து தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தவர் நடிகர் பிரித்விராஜ் தான். இந்த இரண்டு வருட காலத்தில் அவர் நடித்த குருதி, கோல்ட் கேஸ், பிரம்மம், ப்ரோ டாடி என நான்கு படங்கள் தொடர்ந்து ஓடிடியில் தான் வெளியாகின.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரித்விராஜ் நடித்துள்ள ஜனகணமன திரைப்படம் நாளை (ஏப்ரல் 28) நேரடியாக தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்துள்ளார் ட்ரைவிங் லைசென்ஸ் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது.