இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் இருந்து கடந்த இரண்டு வருடங்களில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் மலையாள திரையுலகில் தியேட்டர்களில் பெரிய அளவில் திரைப்படங்கள் திரையிடப்படவில்லை. அந்த சமயத்தில் ஓடிடி தளங்கள் மூலமாக தனது படங்களை அடுத்தடுத்து தொடர்ந்து வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தவர் நடிகர் பிரித்விராஜ் தான். இந்த இரண்டு வருட காலத்தில் அவர் நடித்த குருதி, கோல்ட் கேஸ், பிரம்மம், ப்ரோ டாடி என நான்கு படங்கள் தொடர்ந்து ஓடிடியில் தான் வெளியாகின.
இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பிரித்விராஜ் நடித்துள்ள ஜனகணமன திரைப்படம் நாளை (ஏப்ரல் 28) நேரடியாக தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடுவும் நடித்துள்ளார் ட்ரைவிங் லைசென்ஸ் படத்தை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படம் என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது.