20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
ராஜமவுலியின் இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இன்னொரு பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் தனது 15வது படத்தில் நடிக்கும் வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் நடிகர் ராம்சரண். ஏற்கனவே ஐதராபாத்தில் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பஞ்சாபில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ராம்சரணுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அறிமுகம் கிடைத்துள்ளதை பஞ்சாப்பில் நடைபெற்ற படப்பிடிப்பில் பார்க்க முடிந்தது..
இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பஞ்சாப் போலீசார், ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படங்களும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமல்ல அந்த படப்பிடிப்பு பகுதியில் கூடிய பொதுமக்கள் குறிப்பாக இளம்பெண்கள் ராம்சரணுடன் புகைப்படம் எடுக்க முண்டியடிக்க, அதிலும் ராம்சரண் அவர்கள் ஒவ்வொருவரின் மொபைல் போனையும் வாங்கி அவர்களுடன் தானே செல்பி எடுத்து கொடுத்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.