மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
ராஜமவுலியின் இயக்கத்தில் நடித்த ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக இன்னொரு பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் தனது 15வது படத்தில் நடிக்கும் வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார் நடிகர் ராம்சரண். ஏற்கனவே ஐதராபாத்தில் ஒரு கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது பஞ்சாபில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. பான் இந்தியா படமாக வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் ராம்சரணுக்கு இந்திய அளவில் மிகப்பெரிய அறிமுகம் கிடைத்துள்ளதை பஞ்சாப்பில் நடைபெற்ற படப்பிடிப்பில் பார்க்க முடிந்தது..
இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட பஞ்சாப் போலீசார், ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படங்களும் செல்பியும் எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமல்ல அந்த படப்பிடிப்பு பகுதியில் கூடிய பொதுமக்கள் குறிப்பாக இளம்பெண்கள் ராம்சரணுடன் புகைப்படம் எடுக்க முண்டியடிக்க, அதிலும் ராம்சரண் அவர்கள் ஒவ்வொருவரின் மொபைல் போனையும் வாங்கி அவர்களுடன் தானே செல்பி எடுத்து கொடுத்த வீடியோ ஒன்றும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.