யாஷிகாவுடன் காதலா? - வெறும் புரொமோஷன் தாங்க என்கிறார் ரிச்சர்ட் ரிஷி | பொய் புகார் : பிரான்ஸ் பெண் மீது அறம் இயக்குனர் புகார் | போதையில் நடிகர் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு | காதலியை கரம்பிடிக்கும் நரேஷ் | நீண்ட இடைவேளைக்குப் பின் சின்னத்திரையில் மீண்டும் களமிறங்கும் சாதனா | சுரேஷ்கோபி படம் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பிய அனுபமா பரமேஸ்வரன் | நேஹா சக்சேனாவும் பரபரப்பு வளையத்தில் சிக்குவாரா? | இறுதிக்கட்டத்தை எட்டிய அர்ஜுன் - நிக்கி கல்ராணியின் மலையாள படம் | 35 வருடங்களுக்குப் பிறகு வைரலான மோகன்லால் - மம்முட்டி தம்பதி | ஆதிபுருஷ் படத்திற்காக 10 ஆயிரம் டிக்கெட்டுகளை கொடுக்கும் ரன்பீர் கபூர்! |
இயக்குனர் ஷங்கர் தெலுங்கில் இயக்கி வரும் ஆர்.சி-15 படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்து வருபவர் கியாரா அத்வானி. இவருக்கும், சித்தார்த் மல்ஹோத்ராவுக்கும் கடந்த வாரத்தில் ராஜஸ்தானியில் உள்ள ஜெய்சல்மாரில் ஆடம்பரமான முறையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து கியாரா அத்வானிக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இதற்கு நன்றி சொல்லும் விதமாக, 'இது எங்களுக்கு இனிமையான ஆச்சரியம். அன்பை உணர்கிறேன். மிக்க நன்றி. உங்களிடம் நிறைய அன்பை இழந்துவிட்டேன் தோழர்களே' என்று பதிவிட்டுள்ளார் கியாரா அத்வானி.
இந்த நிலையில் கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி டில்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. இதையடுத்து ஆர்சி-15 படக்குழுவை சேர்ந்த, இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகர் ராம்சரண் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் கியாரா அத்வானி - சித்தார்த் மல்கோஹோத்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து பூக்களை அள்ளி தூவியபடி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்கள். அதில், 'உங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி, அன்பு மற்றும் ஒலியுடன் இருக்க வாழ்த்துகிறோம்' என்று பதிவிட்டுள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.