என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

தற்போது இரண்டு சூப்பர் ஸ்டார் நடிகர்களுடன் தான் நடித்து வருவதாக ஒரு மகிழ்ச்சி செய்தி வெளியிட்டுள்ளார் தமன்னா. அது குறித்து அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், தமிழில் சில ஆண்டுகளாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நான், இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறேன். தமிழில் பட வாய்ப்புகளே இல்லாமல் இருக்கும்போது ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இது ஒரு கனவு போல் உள்ளது.
அந்த வகையில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற எனது நீண்டநாள் கனவு இப்போது நனவாகி இருக்கிறது. அதேபோல் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலா சங்கர் என்ற படத்தில் நடித்து வருகிறேன். இதற்கு முன்பு சைராவில் அவருடன் நடித்திருந்தாலும் அது சிறிய வேடம். ஆனால் இந்த போலா சங்கர் படத்தில் முழுக்க முழுக்க கதாநாயகியாக நடித்து வருகிறேன். அதோடு சிரஞ்சீவி உடன் இணைந்து நடனமாட வேண்டும் என்பதும் எனது நீண்ட நாள் கனவு. அதனால் இந்த படத்தில் அவருடன் நடிக்கும் பாடல் காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார் தமன்னா.