பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முன்னணி நடிகர் திலீப் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியை கொல்ல திட்டமிட்டதாக மற்றொரு வழக்கு திலீப் மீது தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சில ஆடியோக்கள் வெளியானது.
இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக நடிகையும், திலீப்பின் இரண்டாவது மனைவியுமான காவ்யாக மாதவன் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவர் விசாரணைக்கு இன்று (ஏப்11) வரவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த சம்மனுக்கு பதில் அளித்துள்ள காவ்யா மாதவன், தான் தற்போது சொந்த பணி காரணமாக சென்னையில் இருப்பதாகவும், இதனால் ஆஜராக இயலாது என்றும், வருகிற 13ம் தேதி என் வீட்டில் விசாரணையை வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தீலீப்பின் முன்னாள் மனைவியும், நடிகையுமான மஞ்சு வாரியரிடம் நேற்று விசாரணை அதிகாரிகள் திடீரென விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் கிடைத்துள்ள ஆடியோ ஆதாரங்கள் உண்மைதானா என்பதை அவரிடம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.