சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தாய் சங்கமான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், 2020ல் பாரதிராஜாவால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இதில் 365 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து, புதிய நிர்வாக குழு அமைக்க வேண்டும். அதன்படி, 2025-28-க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், தேர்தல் அதிகாரியாக சங்கத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. 7 அலுவலக நிர்வாகிகள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன தலைவராக பாரதிராஜா நீடிக்கிறார், செயல் தலைவராக டி.ஜி.தியாகராஜன், பொதுச் செயலாளராக டி.சிவா, துணை தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, லலித்குமார், பொருளாளராக தனஞ்செயன், இணை செயலாளர்களாக முகேஷ் ஆர்.மெஹ்தா, வினோத்குமார் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, விக்னேஷ் சிவன், ஆர்.கண்ணன், ரமேஷ் பிள்ளை, லக்ஷ்மன் குமார், சுதன் சுந்தரம், கமல் போஹ்ரா , கார்த்திகேயன் சந்தானம், நிதின் சத்யா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்படுள்ளனர்.