பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் | வெங்கடேஷ் படத்திற்காக தெலுங்கில் நுழைந்த யோகி பாபு | சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா இணைந்து நடிப்பார்களா ? ரசிகர்கள் எதிர்பார்ப்பு | தாய் கிழவி : நீண்ட இடைவெளிக்குப் பின்…. | ஆஞ்சநேயர் பிறந்த ஊரில் பூஜையுடன் துவங்கிய 'ஜெய் ஹனுமான்' | தனுஷை குறிப்பிட்டு பேசிய சிவகார்த்திகேயன் : கொச்சியில் நடந்தது என்ன? |

தாய் சங்கமான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், 2020ல் பாரதிராஜாவால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இதில் 365 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து, புதிய நிர்வாக குழு அமைக்க வேண்டும். அதன்படி, 2025-28-க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், தேர்தல் அதிகாரியாக சங்கத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. 7 அலுவலக நிர்வாகிகள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன தலைவராக பாரதிராஜா நீடிக்கிறார், செயல் தலைவராக டி.ஜி.தியாகராஜன், பொதுச் செயலாளராக டி.சிவா, துணை தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, லலித்குமார், பொருளாளராக தனஞ்செயன், இணை செயலாளர்களாக முகேஷ் ஆர்.மெஹ்தா, வினோத்குமார் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, விக்னேஷ் சிவன், ஆர்.கண்ணன், ரமேஷ் பிள்ளை, லக்ஷ்மன் குமார், சுதன் சுந்தரம், கமல் போஹ்ரா , கார்த்திகேயன் சந்தானம், நிதின் சத்யா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்படுள்ளனர்.