சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தாய் சங்கமான தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து பிரிந்து தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், 2020ல் பாரதிராஜாவால் தோற்றுவிக்கப்பட்டது. தற்போது இதில் 365 தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடந்து, புதிய நிர்வாக குழு அமைக்க வேண்டும். அதன்படி, 2025-28-க்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க, இயக்குனர் ஆர்.வி. உதயகுமார், தேர்தல் அதிகாரியாக சங்கத்தால் நியமிக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றது. 7 அலுவலக நிர்வாகிகள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவன தலைவராக பாரதிராஜா நீடிக்கிறார், செயல் தலைவராக டி.ஜி.தியாகராஜன், பொதுச் செயலாளராக டி.சிவா, துணை தலைவர்களாக எஸ்.ஆர்.பிரபு, லலித்குமார், பொருளாளராக தனஞ்செயன், இணை செயலாளர்களாக முகேஷ் ஆர்.மெஹ்தா, வினோத்குமார் ஆகியோர் தேர்வு பெற்றுள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, விக்னேஷ் சிவன், ஆர்.கண்ணன், ரமேஷ் பிள்ளை, லக்ஷ்மன் குமார், சுதன் சுந்தரம், கமல் போஹ்ரா , கார்த்திகேயன் சந்தானம், நிதின் சத்யா ஆகியோர் செயற்குழு உறுப்பினர்களாக அறிவிக்கப்படுள்ளனர்.