சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
சமீபகாலமாக தென்னிந்திய அளவில் பரபரப்பாக பேசப்படும் அளவிற்கு முன்னேறி வருகிறார் நடிகை ருக்மணி வசந்த். சில மாதங்களுக்கு முன்பு விஜய் சேதுபதி வழியாக ஏஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக மதராஸி படத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இது தவிர கன்னடத்தில் யஷ் ஜோடியாக டாக்ஸிக், ரிஷப் ஷெட்டி ஜோடியாக காந்தாரா ' சாப்டர் 1' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் தெலுங்கில் பிரசாந்த் நீல் டைரக்ஷனில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகி வரும் டிராகன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் படத்திலும் ருக்மணி வசந்த் தான் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார் என்று ஒரு தகவல் கடந்த சில நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்ற மதராஸி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அந்த படத்தின் தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் பேசும்போது, ருக்மணி வசந்த் அடுத்ததாக ஜூனியர் என்டிஆர் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என்கிற ரகசியத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார். அந்த வகையில் ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ லீலா போல வரும் நாட்களில் ரசிகர்களை ருக்மணி வசந்த் ஜுரம் பிடித்துக்கொள்ளும் என்பதில் சந்தேகமே இல்லை.