குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
மலையாள திரையுலகில் தற்போது மிகவும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் ‛சிபிஐ 5 ;தி பிரைன்'. மம்முட்டி நடிப்பில் கடந்த 1988ல் இருந்து இதுவரை நான்கு பாகங்களாக வெளியாகி உள்ள சிபிஐ படத்தின் ஐந்தாம் பாகமாக இது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களுக்கும் கதை எழுதிய கதாசிரியர் எஸ்.என்.சுவாமி இந்த பாகத்திற்கும் கதை எழுத, நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது படப்பிடிப்பில் மம்முட்டி நடித்த காட்சிகளை திரையில் பார்த்து ரொம்பவே வியந்து போயுள்ளார் இயக்குனர் மது.
தனது வியப்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் கூறும்போது, 'ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிப்பவர்கள் பல பேர் மாறிவிட்டனர். ஆனால் சிபிஐ படத்தில் ஐந்தாம் பாகத்திலும் மம்முட்டி தான் நடிக்கிறார். சிபிஐ முதல் பாகம் வெளியானபோது பார்ப்பதற்கு எப்படி காட்சி அளித்தாரோ. 34 வருடங்கள் கழித்து இப்போது ஐந்தாம் பாகம் உருவாகும்போதும் அந்த சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் அதேபோன்ற உருவத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் மம்முட்டி" என்று தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மது.