டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள திரையுலகில் தற்போது மிகவும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றுதான் ‛சிபிஐ 5 ;தி பிரைன்'. மம்முட்டி நடிப்பில் கடந்த 1988ல் இருந்து இதுவரை நான்கு பாகங்களாக வெளியாகி உள்ள சிபிஐ படத்தின் ஐந்தாம் பாகமாக இது உருவாகி வருகிறது. நான்கு பாகங்களுக்கும் கதை எழுதிய கதாசிரியர் எஸ்.என்.சுவாமி இந்த பாகத்திற்கும் கதை எழுத, நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது தான் இந்த பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளின்போது படப்பிடிப்பில் மம்முட்டி நடித்த காட்சிகளை திரையில் பார்த்து ரொம்பவே வியந்து போயுள்ளார் இயக்குனர் மது.
தனது வியப்பை வெளிப்படுத்தும் விதமாக அவர் கூறும்போது, 'ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடிப்பவர்கள் பல பேர் மாறிவிட்டனர். ஆனால் சிபிஐ படத்தில் ஐந்தாம் பாகத்திலும் மம்முட்டி தான் நடிக்கிறார். சிபிஐ முதல் பாகம் வெளியானபோது பார்ப்பதற்கு எப்படி காட்சி அளித்தாரோ. 34 வருடங்கள் கழித்து இப்போது ஐந்தாம் பாகம் உருவாகும்போதும் அந்த சேதுராம ஐயர் கதாபாத்திரத்தில் அதேபோன்ற உருவத்தை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார் மம்முட்டி" என்று தனது பெருமிதத்தை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் மது.




