விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
பிரபல மலையாள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிகழ்வு நடைபெற்று கிட்டத்தட்ட 5 வருடங்கள் ஓடிவிட்டது. இந்த வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு மூன்று மாத சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.
ஆமை வேகத்தில் நடந்து வந்த இந்த வழக்கு சமீபத்தில் சம்பந்தப்பட்ட நடிகை உருக்கமாக தனது நிலை குறித்து வெளியிட்ட பின்னர் மீண்டும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. ஒருபக்கம் திலீப் மற்றும் அவரது உறவினர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னொரு பக்கம் இந்த வழக்கில் திலீப்பின் இரண்டாவது மனைவியான காவ்யா மாதவனை விசாரிப்பதற்காக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நாளை அவர் குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராகி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளார். நடிகை கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டு குற்றவாளிகள் தங்களுக்குள் மொபைல் போனில் பேசிக்கொண்டபோது இந்த கடத்தலுக்கு மூலக்காரணமே காவ்யா மாதவன் தான் என்றும் அவரது கணவர் நடிகர் திலீப் பின்னர் தான் இந்த திட்டத்தில் இணைந்தார் என்றும் பேசிக் கொண்ட ஒரு ஆடியோ போலீஸ் வசம் தற்போது துருப்புச் சீட்டாக கிடைத்துள்ளதாம். இதன் அடிப்படையில் விசாரணை செய்யத்தான் காவ்யா மாதவனுக்கு சம்மன் அனுப்பி உள்ளனர். இதனால் காவ்யா மாதவனுக்கும் தற்போது திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.