லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி | மம்முட்டிக்காக கண்ணூர் கோவிலில் பொன்குடம் நேர்த்திக்கடன் செலுத்திய ரசிகர் | ரெட் லேபிள் படத்தின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகை சிம்ரன் | இப்ப ஹீரோ, அடுத்து இயக்கம் : புதுமாப்பிள்ளை அபிஷன் ஜீவிந்த் பேட்டி | இந்தப்போக்கு மோசமானது : நிவேதா பெத்துராஜ் | தன் இறப்புக்கு லீவு வாங்கிக் கொடுத்த அப்பா : மேடையில் கண் கலங்கிய ஆனந்தராஜ் | அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் |

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் தான் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதைத்தொடர்ந்து அவரை வைத்தே மீண்டும் ஜனகணமன என்கிற படத்தையும் இயக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது சிரஞ்சீவி நடித்துவரும் காட்பாதர் படம் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகிறார் பூரி ஜெகன்நாத். படப்பிடிப்புத் தளத்திற்கு அவரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ள சிரஞ்சீவி இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் பிரித்விராஜ் டைரக்சனில் மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படம் தான் தற்போது காட்பாதர் என்கிற பெயரில் தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தில் மிக முக்கியமான வேடம் ஒன்றில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடிக்கிறார். சமீபத்தில் அவர் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு விடைபெற்ற நிலையில் தற்போது பூரி ஜெகன்நாத் முதல் முறையாக ஒரு நடிகராக இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
இதில் இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் சிரஞ்சீவியின் மகனான நடிகர் ராம்சரணை முதன்முறையாக சிறுத்தா என்கிற படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத் தான். தற்போது அவரையே தனது படத்தில் நடிகராக அறிமுகப்படுத்துகிறார் சிரஞ்சீவி.