காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.66 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. சத்தமின்றி பல சமூக பணிகளையும் செய்து வருகிறர். தனது தந்தை கிருஷ்ணாவின் பெயரில் மகேஷ்பாபு நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் இந்த பணிகளை செய்து வருகிறார். ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் பல்வேறு மருத்துவ பணிகள் செய்வதோடு இரண்டு மாநிலங்களிலும் பல கிராமங்களை தத்தெடுத்துள்ளார்.
இந்த நிலையில் உலக சுகாதார தினத்தையொட்டி 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து அவர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். இந்த தகவல் அவர் மனைவி நம்ரதா ஷிரோத்கர் வெளியிட்டுள்ள பதிவின் மூலம் தெரியவந்திருக்கிறது.
"உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, 30 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிகழ்வை ஆளுநர் ஸ்ரீ பிஸ்வபூசன் ஹரிசந்தன் பாராட்டினார். தரமான மருத்துவ சிகிச்சை வழங்கிய ஆந்திர மருத்துவமனை மருத்துவக்குழுவுக்கு நன்றிகள்" என்று நம்ரதா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை ஆயிரம் குழந்தைகளுக்கு மேல் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கு மகேஷ்பாபு நிதி உதவி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.