விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
மலையாள நடிகர் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் அவர் மீது இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் கூறிய சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என நினைத்து முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் நடிகர் திலீப். இந்த மனுவின் மீதான விசாரணை ஒவ்வொரு முறையும் தள்ளி வைக்கப்பட்டு இதுவரை நான்கு முறை விசாரணை தள்ளிப்போய் உள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் போலீசார் முன்னிலையில் மூன்று நாட்களுக்கு திலீப் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த விசாரணை அறிக்கை ஜனவரி 27 க்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் திலீப்பிடம் மூன்று நாட்கள் விசாரணை முடிந்து அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை தரப்பு இன்னும் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளது. அதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், வரும் பிப்ரவரி-2ல் பிறப்பின் முன் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.