'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள நடிகர் திலீப், நடிகை கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறை சென்று, பின் ஜாமீனில் விடுதலையானார். இந்த நிலையில் அவர் மீது இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் கூறிய சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என நினைத்து முன் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார் நடிகர் திலீப். இந்த மனுவின் மீதான விசாரணை ஒவ்வொரு முறையும் தள்ளி வைக்கப்பட்டு இதுவரை நான்கு முறை விசாரணை தள்ளிப்போய் உள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் போலீசார் முன்னிலையில் மூன்று நாட்களுக்கு திலீப் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் அந்த விசாரணை அறிக்கை ஜனவரி 27 க்குள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் திலீப்பிடம் மூன்று நாட்கள் விசாரணை முடிந்து அதன் அறிக்கை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விசாரணை தரப்பு இன்னும் ஒரு வார கால அவகாசம் கேட்டுள்ளது. அதற்கு அனுமதி அளித்த உயர்நீதிமன்றம், வரும் பிப்ரவரி-2ல் பிறப்பின் முன் ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதுவரை அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.