சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி |

மம்முட்டி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் சிபிஐ 5. ஏற்கனவே நான்கு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 17 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் மம்முட்டி.
இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மம்முட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் தொற்றிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தெரிகிறது. தான் ஏற்கனவே நடித்து வந்த சிபிஐ 5 படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி மீண்டும் கலந்து கொண்டு  நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை படத்தின் இயக்குனர் கே.மது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            