எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
மம்முட்டி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் சிபிஐ 5. ஏற்கனவே நான்கு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில், கிட்டத்தட்ட 17 வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் ஐந்தாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் மம்முட்டி.
இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. மம்முட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் அவர் தொற்றிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தெரிகிறது. தான் ஏற்கனவே நடித்து வந்த சிபிஐ 5 படத்தின் படப்பிடிப்பில் மம்முட்டி மீண்டும் கலந்து கொண்டு நடிக்க ஆரம்பித்துவிட்டார் என்றும் தெரிய வந்துள்ளது.
இதை உறுதிப்படுத்தும் விதமாக படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை படத்தின் இயக்குனர் கே.மது தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.