‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? |
செலக்டிவான படங்களில் மட்டும் நடித்து வரும் நடிகை பார்வதி, மலையாளத்தில் தான் அறிமுகமான காலகட்டத்திலேயே நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட்டார். அதேசமயம் மம்முட்டியுடன் இணைந்து அவர் ஒரு படத்தில்கூட நடித்ததில்லை. இந்த நிலையில் தற்போது ரதீனா என்பவர் இயக்கத்தில் புழு என்கிற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார் பார்வதி.
இந்தப்படத்தின் இயக்குனர் ரதீனா இந்த கதையை கூறியதும் அதில் உருவாக்கப்பட்டிருந்த கதாநாயகி பாத்திரம் பார்வதியை ரொம்பவே கவர்ந்து விட்டதால் இதில் நான்தான் நடிப்பேன் என உறுதியாக கூறிவிட்டார். அதன்பிறகுதான் கதாநாயகனாக நடிப்பது யார் என இயக்குனரிடம் கேட்க அவர் மம்முட்டி என பதில் சொல்லியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போனார் பார்வதி.
காரணம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கசபா என்கிற படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக மம்முட்டி நடித்து இருந்தார் என கூறியதால் மம்முட்டி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் பார்வதி. இதனால் மம்முட்டிக்கு எதிரானவராகவே அவர் சித்தரிக்கப்பட்டு வந்தார். இந்த நிலையில் தனக்கு பிடித்த கதையும் கதாபாத்திரமும் கிடைத்தாலும் அதன் கதாநாயகன் மம்முட்டி என்பதால் அதில் எப்படி நடிக்க முடியும் என தயங்கினாராம் பார்வதி.
ஆனால் இந்த கதாபாத்திரத்தில் பார்வதியை நடிக்க சிபாரிசு செய்ததே மம்முட்டி தான் என இயக்குனர் கூறியதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார் பார்வதி. தனது சர்ச்சை பேச்சு எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் தன்னை படத்தில் நடிக்க அழைத்த மம்முட்டியின் பெருந்தன்மை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் புகழ்ந்து கூறியுள்ளார் பார்வதி.