சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு |

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படம், இதுதவிர சிறுத்தை சிவாவுடன் என அடுத்தடுத்து தனது பட வரிசையை தயார் நிலையில் வைத்துள்ளார்.. அதேசமயம் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற சூர்யா, அங்கே தன்னுடைய புதிய பட அறிவிப்பு குறித்து ஒரு தகவலை வெளிப்படையாகவே கூறினார்.
அதாவது மம்முட்டியை வைத்து பல வருடங்களுக்கு முன் பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் அமல் நீரத். தற்போது மம்முட்டியை வைத்து மீண்டும் பீஷ்ம பருவம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தான் கலந்துகொண்ட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஏற்கனவே ஒரு கதை கூறியதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறியுள்ளார். எண்பதுகளில் மம்முட்டி நடித்த மிருகயா என்கிற படத்தை தமிழில் சூர்யாவை வைத்து ரீமேக் செய்யலாம் என சில வருடங்களுக்கு முன்பே அமல் நீரத் முயற்சித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.