ஒரே படத்துடன் வெளியேற என் அம்மா தான் காரணம் ; மனம் திறந்த மம்முட்டி பட நடிகை | தாத்தா ஆனார் பிரியதர்ஷன் : கல்யாணியின் பிறந்தநாளில் வெளிப்பட்ட உண்மை | இரண்டு மாதத்திற்கு பிறகு ஸ்ரேயா கோஷலின் எக்ஸ் கணக்கு மீட்பு | ஷாருக்கான் மகளுக்கு அம்மாவாக நடிக்கும் தீபிகா படுகோன் | பின்சீட்டில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணியுங்கள் : சோனு சூட் உருக்கமான வேண்டுகோள் | ''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி |
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படம், இதுதவிர சிறுத்தை சிவாவுடன் என அடுத்தடுத்து தனது பட வரிசையை தயார் நிலையில் வைத்துள்ளார்.. அதேசமயம் சமீபத்தில் எதற்கும் துணிந்தவன் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்காக கேரளா சென்ற சூர்யா, அங்கே தன்னுடைய புதிய பட அறிவிப்பு குறித்து ஒரு தகவலை வெளிப்படையாகவே கூறினார்.
அதாவது மம்முட்டியை வைத்து பல வருடங்களுக்கு முன் பிக்-பி என்கிற கேங்ஸ்டர் படத்தை இயக்கியவர் அமல் நீரத். தற்போது மம்முட்டியை வைத்து மீண்டும் பீஷ்ம பருவம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் அந்தப்படம் வெளியானது.
இந்த நிலையில் தான் கலந்துகொண்ட புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசும்போது, இயக்குனர் அமல் நீரத் தன்னிடம் ஏற்கனவே ஒரு கதை கூறியதாகவும், விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் கூறியுள்ளார். எண்பதுகளில் மம்முட்டி நடித்த மிருகயா என்கிற படத்தை தமிழில் சூர்யாவை வைத்து ரீமேக் செய்யலாம் என சில வருடங்களுக்கு முன்பே அமல் நீரத் முயற்சித்து வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.