நயன்தாராவின் 75வது படம் தொடங்கியது | அயோத்தி வெற்றி : இயக்குனருக்கு தங்க சங்கிலி பரிசளித்த சசிகுமார் | ராணி முகர்ஜி படத்திற்கு நார்வே எதிர்ப்பு | காமெடி நடிகர் மீது பாலியல் புகார் | 1500 கோடி சொத்தை சுருட்டவே 2வது திருமணம் : பவித்ராவின் முன்னாள் கணவர் குற்றச்சாட்டு | இத்தாலி, ஸ்பானிஷ் மொழிகளில் வெளியாகும் 'காந்தாரா' | அன்பே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே அன்பு - விக்னேஷ் சிவன் | 'பத்து தல' - சிம்பு பட டிரைலர்களில் புதிய சாதனை | ஒரு வருடத்தைக் கடந்த 'எகே 62' அறிவிப்பு : புதிய அறிவிப்பு எப்போது வரும் ? | ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் நகைகள் திருட்டு |
தன் பதிவுகளில் ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுவதில் வல்லவர் தான் சர்ச்சை மன்னன் என பெயரெடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா. தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு முடிவு குறித்து தனது கருத்தை சொல்கிறேன் என வழக்கம்போல சலசலப்பை ஏற்படுத்தினார் ராம்கோபால் வர்மா.
அதற்கடுத்த பதிவில் வேறுபக்கம் பார்வையை திருப்பிய ராம்கோபால் வர்மா, சமீபத்தில்தான் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தை பார்த்திருப்பார் போலும்.. உடனே தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேட்பவர்களுக்கு கடினமாக இருந்தாலும் அடுத்த மெகாஸ்டார் அல்லு அர்ஜுன் தான் என்பது தான் உண்மை என கூறியுள்ளார்.
இத்துடன் விட்டிருந்தாலாவது பரவாயில்லை.. இப்படி ஒரு திறமையான மகனை தெலுங்கு சினிமாவுக்கு கொடுத்துள்ளார் அவரது தந்தை அல்லு அரவிந்த் என்றும், இனிவரும் நாட்களில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்கள் எல்லாம் அல்லு அர்ஜுனின் உறவினர்கள் என்றே அறியப்படுவார்கள்” என்றும் கூறியிருந்தார். சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இருவரையும் மட்டம் தட்டும் நோக்கில் இவரது பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் இந்த இரண்டு பதிவுகளை மட்டும் டெலீட் செய்துவிட்டார் ராம்கோபால் வர்மா.