ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த இரண்டு அலைகளை விட இப்போது பரவ ஆரம்பித்திருக்கும் இந்த மூன்றாவது அலையால் திரையுலகை சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் இந்த மூன்றாவது அலையின் வீரியம் குறைவோ என்னவோ, அனைவரும் ஒருசில நாட்களிலேயே நல்லபடியாக குணமாகியும் விடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள நடிகர் மம்முட்டி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நடிகர் சுரேஷ்கோபியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
இதுகுறித்த தகவலை அவரே வெளியிட்டுள்ளதுடன், எவ்வளவோ முன்னெச்சரிக்கையாக இருந்தும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளேன். தற்போது என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டு விட்டேன். கடந்த சில நாட்களாக என்னை தொடர்பு கொண்டவர்கள் தங்களை ஒருமுறை பரிசோதனை செய்துகொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம்தான் தமிழில் தான் நடித்து முடித்துள்ள தமிழரசன் என்கிற படத்தின் டப்பிங் பணிகளை முடித்த சுரேஷ்கோபி, கடந்த சில தினங்களுக்கு முன்தான் மலையாளத்தில் தான் நடித்துவரும் பாப்பன் படத்தின் படப்பிடிப்பையும் முடித்தார்.