ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை மிக முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. ஆனால் குணச்சித்திர நடிப்பிலும் தடம் பதித்து, 'பேரறியாதவர்' என்கிற படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் பெற்றார். அதை தொடர்ந்து வெறுமனே காமெடியோடு மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார்.
70 வயது கிழவராக இவர் நடித்த 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' மற்றும் ஸ்ட்ரிக்ட்டான மோட்டார் வாகன ஆய்வாளராக நடித்திருந்த 'டிரைவிங் லைசென்ஸ்' என இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தவர்கள் காமெடி நடிகராக பல வருடங்களை வீணடித்து விட்டாரே என்றுதான் கூறினார்கள். இந்தநிலையில் தற்போது .புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தின் கதையை தற்போது கேரளாவின் அரூர் பகுதியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுப்ரமணியன் என்பவர் தான் எழுதியுள்ளார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களின் அடிப்படையில் இந்த கதையை அவர் எழுதியுள்ளாராம். இவரது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தான் சுராஜ் நடிக்க இருக்கிறார்.




