ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை மிக முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. ஆனால் குணச்சித்திர நடிப்பிலும் தடம் பதித்து, 'பேரறியாதவர்' என்கிற படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் பெற்றார். அதை தொடர்ந்து வெறுமனே காமெடியோடு மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார்.
70 வயது கிழவராக இவர் நடித்த 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' மற்றும் ஸ்ட்ரிக்ட்டான மோட்டார் வாகன ஆய்வாளராக நடித்திருந்த 'டிரைவிங் லைசென்ஸ்' என இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தவர்கள் காமெடி நடிகராக பல வருடங்களை வீணடித்து விட்டாரே என்றுதான் கூறினார்கள். இந்தநிலையில் தற்போது .புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தின் கதையை தற்போது கேரளாவின் அரூர் பகுதியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுப்ரமணியன் என்பவர் தான் எழுதியுள்ளார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களின் அடிப்படையில் இந்த கதையை அவர் எழுதியுள்ளாராம். இவரது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தான் சுராஜ் நடிக்க இருக்கிறார்.