ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மலையாள சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை மிக முக்கியமான நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு. ஆனால் குணச்சித்திர நடிப்பிலும் தடம் பதித்து, 'பேரறியாதவர்' என்கிற படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசியவிருதும் பெற்றார். அதை தொடர்ந்து வெறுமனே காமெடியோடு மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்து வாங்குகிறார்.
70 வயது கிழவராக இவர் நடித்த 'ஆன்ட்ராய்டு குஞ்சப்பன்' மற்றும் ஸ்ட்ரிக்ட்டான மோட்டார் வாகன ஆய்வாளராக நடித்திருந்த 'டிரைவிங் லைசென்ஸ்' என இரண்டு படங்களையும் அடுத்தடுத்து பார்த்தவர்கள் காமெடி நடிகராக பல வருடங்களை வீணடித்து விட்டாரே என்றுதான் கூறினார்கள். இந்தநிலையில் தற்போது .புதிய படம் ஒன்றில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சுராஜ் வெஞ்சாரமூடு.
இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்தப்படத்தின் கதையை தற்போது கேரளாவின் அரூர் பகுதியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் சுப்ரமணியன் என்பவர் தான் எழுதியுள்ளார். தனது நிஜ வாழ்க்கையில் நடந்த விறுவிறுப்பான சம்பவங்களின் அடிப்படையில் இந்த கதையை அவர் எழுதியுள்ளாராம். இவரது சர்க்கிள் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் தான் சுராஜ் நடிக்க இருக்கிறார்.