ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
கடந்த 2016ல் மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாத சிறைவாசத்திற்கு பின் ஜாமினில் வெளிவந்த திலீப்பிற்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்தவித குடைச்சலும் கொடுக்காமல் அந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடந்தது.
இந்தநிலையில் திலீப்பின் நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில் நடிகர் திலீப்பை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர் கேரள போலீசார். இதையடுத்து திலீப் முன்ஜாமினுக்கு விண்ணப்பித்தார். இந்த மனுவை வெள்ளிகிழமை (இன்று) விசாரிக்கும் வரை திலீப்பை கைது செய்ய தடை விதித்தது நீதிமன்றம்.
இதற்கிடையே ஆலுவாவில் உள்ள திலீப் வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்ற போலீசார் திலீப்பின் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே போலீசார் காம்பவுண்ட் சுவரேறி குதித்து திலீப்பின் வீட்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் காத்திருந்தனர். இந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக திலீப்பின் காதுகளுக்கு சென்றதும் சிறிது நேரத்தில் திலீப்பின் உறவினர் ஒருவர் வந்து போலீசார் சோதனை செய்வதற்காக வீட்டின் கதவை திறந்து விட்டாராம்.