இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
கடந்த 2016ல் மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கிட்டத்தட்ட மூன்று மாத சிறைவாசத்திற்கு பின் ஜாமினில் வெளிவந்த திலீப்பிற்கு, கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக எந்தவித குடைச்சலும் கொடுக்காமல் அந்த வழக்கு அப்படியே அமுங்கி கிடந்தது.
இந்தநிலையில் திலீப்பின் நண்பராக இருந்து தற்போது அவருக்கு எதிராக திரும்பியுள்ள இயக்குனர் பாலச்சந்திர குமார் என்பவர் வெளியிட்ட சில தகவல்களின் அடிப்படையில் நடிகர் திலீப்பை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர் கேரள போலீசார். இதையடுத்து திலீப் முன்ஜாமினுக்கு விண்ணப்பித்தார். இந்த மனுவை வெள்ளிகிழமை (இன்று) விசாரிக்கும் வரை திலீப்பை கைது செய்ய தடை விதித்தது நீதிமன்றம்.
இதற்கிடையே ஆலுவாவில் உள்ள திலீப் வீட்டை சோதனையிடுவதற்கான அனுமதியை பெற்ற போலீசார் திலீப்பின் வீட்டிற்கு வந்தபோது வீடு பூட்டப்பட்டு இருந்தது. உடனே போலீசார் காம்பவுண்ட் சுவரேறி குதித்து திலீப்பின் வீட்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் காத்திருந்தனர். இந்த தகவல் அக்கம்பக்கத்தினர் மூலமாக திலீப்பின் காதுகளுக்கு சென்றதும் சிறிது நேரத்தில் திலீப்பின் உறவினர் ஒருவர் வந்து போலீசார் சோதனை செய்வதற்காக வீட்டின் கதவை திறந்து விட்டாராம்.