என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
வியக்கத்தக்க வகையில் படங்களை இயக்கிவந்த இயக்குனர் ராம்கோபால் வர்மா, கடந்த வருடம் கொரோனா தாக்கம் துவங்கியபின், ஒருசில படங்களை இயக்கி ஓடிடியில் வெளியிட்டார். ஆனால் அவர் யார் மீதோ கொண்ட காழ்ப்புணர்ச்சியால் உண்மைக்கதை என்கிற பெயரில் கதையில் கவனம் செலுத்தாமல் ஏனோ தானோவென்று இயக்கிய அந்தப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. மாறாக ரசிகர்களின் விமர்சனத்துக்கும் அவர் ஆளானார்.
இந்தநிலையில் துளசி தீர்த்தம் என்கிற படத்தை தான் இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இந்தமுறை ஆந்திராவின் பிரபல நாவலாசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத்துடன் கைகோர்த்துள்ளார் ராம்கோபால் வர்மா. எண்டமூரி எழுதி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஹாரர் நாவலான துளசி தளம் நாவலின் இரண்டாம் பகுதியைத்தான் துளசிதீர்த்தம் என்கிற பெயரில் படமாக இயக்குகிறார் ராம்கோபால் வர்மா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளார்.