காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

வியக்கத்தக்க வகையில் படங்களை இயக்கிவந்த இயக்குனர் ராம்கோபால் வர்மா, கடந்த வருடம் கொரோனா தாக்கம் துவங்கியபின், ஒருசில படங்களை இயக்கி ஓடிடியில் வெளியிட்டார். ஆனால் அவர் யார் மீதோ கொண்ட காழ்ப்புணர்ச்சியால் உண்மைக்கதை என்கிற பெயரில் கதையில் கவனம் செலுத்தாமல் ஏனோ தானோவென்று இயக்கிய அந்தப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. மாறாக ரசிகர்களின் விமர்சனத்துக்கும் அவர் ஆளானார்.
இந்தநிலையில் துளசி தீர்த்தம் என்கிற படத்தை தான் இயக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் ராம்கோபால் வர்மா. இந்தமுறை ஆந்திராவின் பிரபல நாவலாசிரியர் எண்டமூரி வீரேந்திரநாத்துடன் கைகோர்த்துள்ளார் ராம்கோபால் வர்மா. எண்டமூரி எழுதி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஹாரர் நாவலான துளசி தளம் நாவலின் இரண்டாம் பகுதியைத்தான் துளசிதீர்த்தம் என்கிற பெயரில் படமாக இயக்குகிறார் ராம்கோபால் வர்மா. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் தற்போது வெளியிட்டுள்ளார்.




