ரஜினி, கமல் இணையும் படத்தில் சூர்யா நடிக்கிறாரா? | விபத்தில் சிக்கியதாக பரவிய வதந்தி: விளக்கமளித்து முற்றுப்புள்ளி வைத்த காஜல் அகர்வால் | அனுமதியின்றி தன் பெயர், படத்தை பயன்படுத்தக்கூடாது: ஐஸ்வர்யா ராய் வழக்கு | சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்க போகும் 3 படங்கள் விபரம் | பிரபாஸ் பிறந்தநாளில் ‛தி ராஜா சாப்' படத்தின் முதல் பாடல் | செப்., 13ல் இளையராஜாவிற்கு தமிழக அரசு சார்பில் பிரமாண்ட பாராட்டு விழா | அல்லு அர்ஜூனை பார்த்து வியந்த ‛டிராகன்' பட இயக்குனர் | தன் முதல் தமிழ் படக்குழுவினருடன் பிறந்தநாளை கொண்டாடிய அனஸ்வரா ராஜன் | கல்கி 2ம் பாகத்தில் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா ? கல்யாணி பிரியதர்ஷன் ஆர்வம் | காந்தாரா 2ம் பாகத்தை கேரளாவில் வெளியிடும் பிரித்விராஜ் |
சினிமா, அரசியல் பிரபலங்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வரும் நடிகரும், அரசியல்வாதியுமான பவன்கல்யாணையும் தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார் ராம்கோபால் வர்மா.
அதாவது, பவன் கல்யாண் வெளியிட்டுள்ள போட்டோவை தனது டுவிட்டரில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் எது போலி என்பதை எனக்கு சொல்லுங்கள். சரியாக சொல்பவர்களுக்கு பரிசு தருவேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த ஆர்ட் டைரக்சனில் ஏதோ தவறாக உள்ளது. ராஜ மவுலி சார் தயவு செய்து உங்களது ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலை கேட்டு எனக்கு சொல்லுங்கள் என்று ராஜமவுலியிடம் கேட்பது போலவும் பதிவிட்டு அவரையும் இந்த சர்ச்சைக்குள் இழுத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.