நடிகை ஆன கபடி வீராங்கனை | பிளாஷ்பேக : சிற்பி மனதில் ஏற்பட்ட காயம் | பிளாஷ்பேக்: ஹீரோவின் தந்தையாக நடித்த சிவாஜி | துரந்தர் பட பிரமாண்ட வெற்றி : சிஷ்யனை பாராட்டிய இயக்குனர் பிரியதர்ஷன் | 23 ஆண்டுகள் கழித்து ஒக்கடு பட இயக்குனருடன் இணைந்த பூமிகா | தி ராஜா சாப் : ஆச்சரியப்படுத்திய அம்மு அபிராமி.. அதிர்ச்சி கொடுத்த கயல் ஆனந்தி | தனுஷ் 54வது படத்தின் டப்பிங் பணி துவங்கியது | அட்லீ உதவி இயக்குனருடன் இணையும் துல்கர் சல்மான் | ‛ஜனநாயகன்' படத்திற்கு சான்றிதழ் அளிக்க சொன்ன உத்தரவுக்கு தடை : சிக்கலில் விஜய் படம் | அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது |

கொரோனா பரவல் காரணமாக சினிமா தியேட்டர்களுக்கும், சினிமா படப்பிடிப்புகளுக்கும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தெலங்கானா மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களை இரவு 8 மணிக்கு முன்னதாகவே மூட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தியேட்டர்களை நடத்த முடியாதென தெலங்கானா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தியேட்டர்களை இன்று(ஏப்., 21) முதல் மூடுகின்றனர். வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகளை 50 பேருக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டே நடத்த வேண்டும் என தெலுங்கு பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சர்க்காரு வாரி பாட்டா, ஆச்சார்யா உள்ளிட்ட சில பெரிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மே மாதம் வரையிலும் தெலுங்கில் புதிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட படங்களின் வெளியீடுகள் கூட தள்ளிப் போகும் என்கிறார்கள்.