ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கொரோனா பரவல் காரணமாக சினிமா தியேட்டர்களுக்கும், சினிமா படப்பிடிப்புகளுக்கும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தெலங்கானா மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. சினிமா தியேட்டர்களை இரவு 8 மணிக்கு முன்னதாகவே மூட வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தியேட்டர்களை நடத்த முடியாதென தெலங்கானா மாநில தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர் தியேட்டர்களை இன்று(ஏப்., 21) முதல் மூடுகின்றனர். வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை இந்நிலை தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.
ஏற்கெனவே தெலுங்குப் படங்களின் படப்பிடிப்புகளை 50 பேருக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டே நடத்த வேண்டும் என தெலுங்கு பிலிம் சேம்பர் ஆப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சர்க்காரு வாரி பாட்டா, ஆச்சார்யா உள்ளிட்ட சில பெரிய படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. மே மாதம் வரையிலும் தெலுங்கில் புதிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட படங்களின் வெளியீடுகள் கூட தள்ளிப் போகும் என்கிறார்கள்.