எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சினிமா, அரசியல் பிரபலங்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இயக்குனர் ராம்கோபால் வர்மா. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை எடுத்து வரும் நடிகரும், அரசியல்வாதியுமான பவன்கல்யாணையும் தனது டுவிட்டரில் கலாய்த்துள்ளார் ராம்கோபால் வர்மா.
அதாவது, பவன் கல்யாண் வெளியிட்டுள்ள போட்டோவை தனது டுவிட்டரில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் எது போலி என்பதை எனக்கு சொல்லுங்கள். சரியாக சொல்பவர்களுக்கு பரிசு தருவேன் என்று தெரிவித்துள்ளார். அதோடு, இந்த ஆர்ட் டைரக்சனில் ஏதோ தவறாக உள்ளது. ராஜ மவுலி சார் தயவு செய்து உங்களது ஆர்ட் டைரக்டர் சாபு சிரிலை கேட்டு எனக்கு சொல்லுங்கள் என்று ராஜமவுலியிடம் கேட்பது போலவும் பதிவிட்டு அவரையும் இந்த சர்ச்சைக்குள் இழுத்திருக்கிறார் ராம்கோபால்வர்மா.