ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

தன் பதிவுகளில் ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுவதில் வல்லவர் தான் சர்ச்சை மன்னன் என பெயரெடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா. தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு முடிவு குறித்து தனது கருத்தை சொல்கிறேன் என வழக்கம்போல சலசலப்பை ஏற்படுத்தினார் ராம்கோபால் வர்மா.
அதற்கடுத்த பதிவில் வேறுபக்கம் பார்வையை திருப்பிய ராம்கோபால் வர்மா, சமீபத்தில்தான் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தை பார்த்திருப்பார் போலும்.. உடனே தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேட்பவர்களுக்கு கடினமாக இருந்தாலும் அடுத்த மெகாஸ்டார் அல்லு அர்ஜுன் தான் என்பது தான் உண்மை என கூறியுள்ளார்.
இத்துடன் விட்டிருந்தாலாவது பரவாயில்லை.. இப்படி ஒரு திறமையான மகனை தெலுங்கு சினிமாவுக்கு கொடுத்துள்ளார் அவரது தந்தை அல்லு அரவிந்த் என்றும், இனிவரும் நாட்களில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்கள் எல்லாம் அல்லு அர்ஜுனின் உறவினர்கள் என்றே அறியப்படுவார்கள்” என்றும் கூறியிருந்தார். சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இருவரையும் மட்டம் தட்டும் நோக்கில் இவரது பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் இந்த இரண்டு பதிவுகளை மட்டும் டெலீட் செய்துவிட்டார் ராம்கோபால் வர்மா.