ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
தன் பதிவுகளில் ஏராளமான சர்ச்சைகளை ஏற்படுத்தி விடுவதில் வல்லவர் தான் சர்ச்சை மன்னன் என பெயரெடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா. தனுஷ்-ஐஸ்வர்யா பிரிவு முடிவு குறித்து தனது கருத்தை சொல்கிறேன் என வழக்கம்போல சலசலப்பை ஏற்படுத்தினார் ராம்கோபால் வர்மா.
அதற்கடுத்த பதிவில் வேறுபக்கம் பார்வையை திருப்பிய ராம்கோபால் வர்மா, சமீபத்தில்தான் அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா படத்தை பார்த்திருப்பார் போலும்.. உடனே தனது சமூக வலைதளப் பக்கத்தில் கேட்பவர்களுக்கு கடினமாக இருந்தாலும் அடுத்த மெகாஸ்டார் அல்லு அர்ஜுன் தான் என்பது தான் உண்மை என கூறியுள்ளார்.
இத்துடன் விட்டிருந்தாலாவது பரவாயில்லை.. இப்படி ஒரு திறமையான மகனை தெலுங்கு சினிமாவுக்கு கொடுத்துள்ளார் அவரது தந்தை அல்லு அரவிந்த் என்றும், இனிவரும் நாட்களில் தெலுங்கு சினிமாவின் மிகப்பெரிய ஹீரோக்கள் எல்லாம் அல்லு அர்ஜுனின் உறவினர்கள் என்றே அறியப்படுவார்கள்” என்றும் கூறியிருந்தார். சிரஞ்சீவி மற்றும் ராம்சரண் இருவரையும் மட்டம் தட்டும் நோக்கில் இவரது பதிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதால் இந்த இரண்டு பதிவுகளை மட்டும் டெலீட் செய்துவிட்டார் ராம்கோபால் வர்மா.