விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் மரம் நடுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பிரபலங்கள் கிரீன் இந்தியா சேலஞ்ச் என்கிற பெயரில் சோசியல் மீடியாவில் அவ்வப்போது பிரச்சாரம் மேற்கொள்வது வழக்கம். திரையுலக பிரபலங்களை பொறுத்தவரை தங்களது பிறந்த நாளிலோ அல்லது தங்களது படங்கள் ரிலீசாகும் சமயத்திலோ இதுபோன்று மரக்கன்றுகள் நட்டு தங்களது சக நடிகர் நடிகைகளுக்கு சவால் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்தவகையில் தற்போது நடிகர் துல்கர் சல்மான், தான் நடித்து பான் இந்தியா படமாக நாளை வெளியாக உள்ள குருப் என்கிற படத்தின் புரமோசன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது ஐதராபாத்தில் முகாமிட்டுள்ள அவர் தனது இன்னொரு படமான ஹே ஷினாமிகா படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி விடுத்துள்ள மரம் நடும் சவாலை ஏற்று அங்கே மரக்கன்றுகளை நட்டு கிரீன் இந்தியா சேலஞ்ச் பிரச்சாரத்தை ரசிகர்களிடம் மீண்டும் துவக்கியுள்ளார்.
எண்பதுகளில் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய குருப் என்கிற கொலைகாரனை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. துல்கர் சல்மானை திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய ஸ்ரீநாத் ராஜேந்திரன் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.