'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் | ரியோ ராஜ் நடிக்கும் 'ராம் இன் லீலா' | இயக்குனர் ராஜ் நிடிமொருவை 2வது திருமணம் செய்தார் சமந்தா | நடிகை கனகா தந்தையும் இயக்குனருமான தேவதாஸ் காலமானார் |

மலையாள சினிமாவின் வளர்ந்து வரும் இளம் நடிகர் ஷேன் நிகம். தான் நடித்து வந்த வெயில் படத்தில் சம்பளம் அதிகமாக கேட்டு தயாரிப்பாளருடன் பிரச்சனை செய்து ரெட்கார்டு போடப்படும் நிலைக்கு ஆளானார். அதன்பின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு தற்போது சில படங்களில் நடித்து வருகிறார் ஷேன் நிகம். அப்படி அவர் நடிக்கும் ஒரு படம் தான் பெர்முடா.
இந்தப்படத்தை பிரபல மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ் குமார் இயகியுள்ளார். பல வருடங்களுக்கு முன் மலையாளத்தில் கமல் நடித்த சாணக்யன் படத்தை இயக்கியவரும், சில வருடங்களுக்கு முன் கமல் நடிப்பில் துவங்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்ட சபாஷ் நாயுடு படத்தை இயக்கியவரும் இவர் தான்.
இந்தப்படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றை மோகன்லால் பாடியுள்ளார். டி.கே.ராஜீவ் குமாரின் டைரக்சனில் சில படங்களில் நடித்துள்ளார் மோகன்லால். அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்த பாடலை பாடியுள்ளார். மேலும் இளைய தலைமுறைக்கான கொண்டாட்டமான பாடலாக இது இருக்கும் என்பதால் இந்த பாடலை பாடவேண்டும் என்கிற உத்வேகம் எனக்கு ஏற்பட்டது என்றும் கூறியுள்ளார் மோகன்லால்.




