நயன்தாராவின் ‛கோல்ட்' அப்டேட் | விடுதலை : வெற்றிமாறனின் திட்டம் | சூர்யாவின் இரும்புக்கை மாயாவி கைவிடப்பட்டது ஏன்? - லோகேஷ் பதில் | சக நடிகர்களை தவிர்க்கிறாரா கமல்ஹாசன், 'விக்ரம்' சர்ச்சை | நடிகர் போண்டா மணி மருத்துவமனையில் அனுமதி | 'லத்தி' இயக்குனருக்கு அதிர்ச்சி கொடுத்த விஷால் | பாலாவுடன் சண்டையா? - வதந்திகளுக்கு சூர்யா பதிலடி | 'இந்தியன் 2' நடக்கும் : கமல்ஹாசன் தகவல் | தங்கர்பச்சானின் 'கருமேகங்கள் ஏன் கலைகின்றன' - ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் | கவனம் ஈர்த்த 'வீட்ல விசேஷம்' பட டிரைலர் |
பிரபல மலையாள குணசித்ர நடிகை கோழிக்கோடு சாரதா. நாடகங்களில் நடித்து வந்த இவர், 1979ம் ஆண்டு அங்காகுறி என்ற படம் மூலம் அறிமுகமாகி சல்லாபம், கண்ணெழுதி பொட்டும் தொட்டு, குட்டி ஸ்ராங், என்னு நிண்டே மொய்தீன் உட்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகள் குறைந்ததும் குறும்படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார்.
75 வயதான சாரதா, கோழிக்கோடு அருகே உள்ள வெள்ளிபரம்பாவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு மூச்சுத்திணறல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவர் மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.