சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற த்ரிஷ்யம்-2 படத்தை அதே பெயரில் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ரீமேக் செய்து எடுத்தனர். முதல் பாகத்தில் இடம்பெற்ற அதே நட்சத்திர கூட்டணியை வைத்து, இந்த முறை இயக்குனர் ஜீத்து ஜோசப்பே தெலுங்கிலும் இயக்கினார். மலையாளத்தை போலவே தெலுங்கிலும் இந்தப்படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற முடிவோடு தான் எடுத்து முடித்தார்கள். ஆனால் அதேசமயம் அசுரன் ரீமேக்காக வெங்கடேஷ் நடித்த நரப்பா படத்தை முதலில் வெளியிட முடிவு செய்ததால் த்ரிஷ்யம்-2 ரிலீஸை தள்ளி வைத்தனர்.
அதேபோல ராணா, சாய்பல்லவி நடிப்பில் உருவான விராட பர்வம் படம், அது தயாரான சமயத்திலேயே தியேட்டர் ரிலீஸ் தான் என்கிற முடிவிலேயே எடுக்கப்பட்டது. இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவித்தும் கொரோனா தாக்கம் காரணமாக அது தள்ளிப்போனது.
இந்த இரண்டு படங்களையும் சுதீர் வர்மா என்கிற தயாரிப்பாளர் தான் தயாரித்துள்ளார். இந்தநிலையில் தற்போது த்ரிஷ்யம்-2 படத்தை தியேட்டர்களில் வெளியிட ஆர்வம் காட்டி அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம் சுதீர் வர்மா. அதேசமயம் விராட பர்வம் படத்தை ஓடிடியில் வெளியிடலாம் என்கிற முடிவுக்கும் வந்துள்ளாராம். தயாரிப்பாளர் இப்படி உல்டாவாக முடிவெடுத்துள்ளதால் வெங்கடேஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதக்க, ராணாவின் ரசிகர்களாக காற்றுப்போன பலூன் போல ஆகிவிட்டார்களாம்.