ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
படம் : தம்பி
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : மாதவன், பூஜா, வடிவேலு, இளவரசு
இயக்குனர் : சீமான்
தயாரிப்பு : டாக்டர் முரளி மனோகர்
'உபதேசம் பண்ணா எவன் கேக்கிறான்? உதைச்சாத் தான் கேக்கிறான்' என, விழிகளை உருட்டியபடியே மாதவன் மிரட்டிய படம், தம்பி. கடந்த, 1996ல், பாஞ்சாலங்குறிச்சி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானாலும், 2006ல் வெளியான, தம்பி படத்தின் வழியாகவே, அதிக கவனம் பெற்றார், சீமான்.
தமிழ் சினிமாவின், 'சாக்லேட் பாய்' நாயகனாக இருந்த மாதவன், ரன் படத்தின் மூலம் ஆக் ஷன் பாதைக்கு திரும்பினாலும், முழுமையான அதிரடி நாயகனாக மாறியது, தம்பி படத்தில் தான். இப்படத்தில், கண்களை இமைக்காமல் நடித்தார்!
தமிழ் நடிகர்கள் யாரும் இப்படத்தில் நடிக்க முன்வராததால், மாதவன் நடித்தார். 'என்ன நடக்குது இங்கே?' என, மாதவன் கேட்கும்போதெல்லாம், நமக்கும் சூடு பரவுகிறது. படத்தின் பலமே, வசனங்கள் தான். 'இங்கே, 'சைலன்ஸ்' என்பதையே, சத்தமாகத் தானே கூற வேண்டி உள்ளது. ஆயுதம் வாங்குற பணத்திற்கு அரிசி வாங்கியிருந்தால், இவ்வுலகத்தில் பசி இருந்திருக்காது...' உள்ளிட்ட வசனங்கள் கைத்தட்டல் பெற்றன.
படத்தில், பெரும்பாலும் ஆங்கில கலப்பின்றி, தமிழில் வசனம் இடம் பெற்றிருந்ததும், பாராட்டுகளை பெற்றது. தன் குடும்பத்தை அழித்த ரவுடிகளை பழிக்கு பழி வாங்காமல், அவர்களை திருத்த, அடிதடியை கையில் எடுக்கும் கதாநாயகன். இது தான், கதை.
மலையாள நடிகர் பிஜு மேனன் வில்லனாக நடித்திருந்தார். பாடல்களிலும் சமூகக் கருத்துகள் பரவியிருந்தன. 'சுடும் நிலவு, பூவனத்தில், என்னம்மா தேவி ஜக்கம்மா...' பாடல்கள் ரசிக்க வைத்தன. கார்த்தி நடிப்பில், தம்பி என்ற பெயரில் சமீபத்தில் ஒரு படம் வெளியானது; தமிழில் தலைப்புக்கும் பஞ்சமா?
பேரன்பும், பெருங்கோபமும் உடையவன், சீமானின் தம்பி!