தொடரும் படத்திற்காக தள்ளிவைக்கப்பட்ட மோகன்லாலின் சோட்டா மும்பை ரீ ரிலீஸ் | ரிலீஸ் தேதியை நான் சொல்றேன் : கூலி துவங்கும்போதே லோகேஷ் போட்ட கண்டிஷன் | மலையாள படத்தின் ஹிந்தி ரீமேக் : இயக்குனர் மறைந்து ஒரு வருடம் கழித்து வெளியாகும் படம் | உங்கள் அப்பாக்களுடனும் நடித்து உங்களுடனும் நடிப்பது ஆசீர்வாதம் தான் : நெகிழ்ந்த மோகன்லால் | அர்ச்சனா ரோல் மாடல் அர்ச்சனா | மாமன் படத்தில் கவுரவ வேடத்தில் விமல் | தமிழுக்கு வரும் துணை முதல்வர் படம் | டூரிஸ்ட் பேமிலி-யை பாராட்டிய ரஜினி : பொக்கிஷ பட்டயம் என சசிகுமார் நெகிழ்ச்சி | கார் ரேஸூக்காக 42 கிலோ எடை குறைத்தேன்: அஜித் பேட்டி | ரசிகர்கள் செய்த காரியத்தால் சூரி வேதனை |
படம் : டிஷ்யூம்
வெளியான ஆண்டு : 2006
நடிகர்கள் : ஜீவா, சந்தியா, நாசர்
இயக்கம் : சசி
தயாரிப்பு : ஆஸ்கார் வி.ரவிச்சந்திரன்
தமிழ் சினிமாவின் தனித்துவமான இயக்குனர் பட்டியலில் சசிக்கு முக்கிய இடம் உண்டு. வாய்ப்பு கிடைக்கிறதே என்பதற்காக, அடுத்தடுத்து படம் இயக்குவதில்லை; தனக்கான கதை கிடைக்கும் வரை காத்திருப்பார். கடந்த, 1998ல், சொல்லாமலே; 2002ல், ரோஜாக் கூட்டம் படங்களை இயக்கியவர், 2006ம் ஆண்டு தான், டிஷ்யூம் என்ற தன் மூன்றாவது படத்தை வெளியிட்டார்.
படகு வீட்டை அழகாய் வரையும் ஓவியக்கல்லுாரி மாணவிக்கும், அந்த படகு வீட்டில் தீப்பற்றி எரிய, ஒரு சண்டை காட்சி எடுக்கலாம் எனக் கூறும், சினிமா சண்டைக்காட்சி நடிகருக்கும் இடையே ஏற்படும் காதல் தான், டிஷ்யூம் படத்தின் கதை.
'டூப்' நடிகர்களின் வாழ்க்கையில் நிகழும் சோகங்களை, நகைச்சுவை துாவி சொல்லி இருந்தார், இயக்குனர். வாய்ப்பு நிறைய இருந்தும், ரத்தம் சொட்டும் சண்டைக் காட்சிகளை கவனமாய் தவிர்த்த விதத்தில், இயக்குனர் சசிக்கு பாராட்டுக்கள்.
'ரிஸ்க் பாஸ்கர்' கதாபாத்திரத்தில், ஜீவா அசத்தியிருந்தார். ராம், ஈ படங்களின் வரிசையில், டிஷ்யூம், சிறந்த நடிகராக வளர்ந்து வந்த நிலையில், கமர்ஷியல் படங்களில் ஆர்வம் காட்டியதால், ஜீவாவின் தனித்த அடையாளம் நொறுங்கியது. இப்படத்தில், 3 அடி உயரமே உள்ள பரூக், காமெடியில் கலக்கியிருந்தார். அவர் கடன் வாங்கும் காட்சிகளில், தியேட்டரில் கரகோஷம் எழுந்தது.
எஸ்.ஜே.சூர்யா, விஷால் ஆகியோர், இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் இடம்பெற்றனர். இப்படத்தில் தான் விஜய் ஆண்டனி, இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால் முதலில் வெளியான படம் சுக்ரன். இப்படத்தில் இடம்பெற்ற, 'பூமிக்கு வெளிச்சம், டைலாமோ, கிட்ட நெருங்கி -வாடா, நெஞ்சாங்கூட்டில், பூ மீது...' பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
காதல் இதயங்களின், டிஷ்யூம் அழகானது!