என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

அல்லுஅர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படங்கள் மலையாளத்திலும் டப் செய்யப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று கேரளா ஆலப்புழாவிற்கு அருகிலுள்ள பன்னமடா ஏரியில் நடைபெற்ற 66வது நேரு டிராபி படகுப் போட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அல்லு அர்ஜூன், கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். அவருடன் அவரது மனைவி சினேகா ரெட்டியும் கலந்து கொண்டார். கேரள கவர்னர் பழனிசாமி சதாசிவம் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இதையடுத்து அல்லு அர்ஜூன் தனது டுவிட்டரில், எனக்கு இந்த கெளரவத்தை வழங்கியதற்காக கேரளா அரசுக்கும், கேரள மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            